Friday, February 1, 2013

அவுஸ்திரேலிய உயர் மட்டக் குழுவினர் கிளிநொச்சி விஜயம்!

Friday, February 01, 2013
இலங்கை::கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலிய உயர் மட்டக் குழுவினர்  கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர். இவ் விஜயத்தின் போது முல்லைத்தீவுப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜேனரல் மார்க்கை இக் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜேனரல் உதய பெரேராவுக்குப் பதிலாகவே முல்லைத்தீவுப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜேனரல் மார்க்கை இக் குழுவினரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச் சந்திப்பின் போது, இப் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதற்கான இராணுவத்தினரின் பங்கு குறித்தும் இவ் உயர் மட்டக் குழுவினர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். மேஜர் ஜேனரல் மார்க் இக் குழுவினரது கேள்விகளுக்கு பதிலலிக்கும் போது, இராணுவத்தினரால் இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நலன்புரித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்ததுடன் கண்ணிவெடி அகழ்வு , புனர்வாழ்வு மற்றும் சமாதானத்தைப் பேனுதல் போன்ற பல செயற்பாடுகளில் இராணுவத்தினரின் பங்கு தொடர்பாகவும் இவர்களுக்கு விளக்கமளித்தார்.

யுத்த்த்தின் பின்னரான இத் துரித அபிவிருத்தி குறித்து இக் குழுவினர் அரசுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இச் சந்திப்பை நினைவு கூறும் முகமாக இரு தரப்புகளுக்கிடையேயும் நினைவுச்சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

No comments:

Post a Comment