Wednesday, February 13, 2013

சுன்னாகம் தெற்கு சபாபதிபிள்ளை வீதியில் உள்ள இடம்பெயர்ந்த நலன்புரி முகாமில் தனிமையில் இருந்த 15 வயதுச் சிறுமி இளம் குடும்பஸ்தர் இருவரால் பாலியல்!

Wednesday, February 13, 2013
இலங்கை::சுன்னாகம் தெற்கு சபாபதிபிள்ளை வீதியில் உள்ள இடம்பெயர்ந்த நலன்புரி முகாமில் தனிமையில் இருந்த 15 வயதுச் சிறுமி இளம் குடும்பஸ்தர் இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறு நலன்புரி முகாமில் அமைந்திருந்த வீட்டில் தனிமையில் இருந்த வேளையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் சிறுமியின் வாயில் பிளாஸ்டர் ஒட்டிவிட்டு, சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment