Monday, January 7, 2013

பிரதம நீதியரசர் மேன்டமுறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று முற்பகல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது!

Monday, January 07, 2013
இலங்கை::தமக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பாக விசாரணை செய்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எதிராக பிரதம நீதியரசர் மேன்டமுறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று முற்பகல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகள் தரப்பில் ஜே.விபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் முன்னிலையானார்.

பிரதமநீதியரசரின் மனு கடந்த மூன்றாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எதிராக தாக்கல் செய்த ஆறு மனுக்கள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டவிளக்கத்தை வழங்கிருந்தது.

பிரதம நீதியரசரின் மனு தொடர்பாக அழைப்பாணை கிடைக்கப்பெற்ற சட்டமா அதிபர் பாலித பெர்னான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிiயாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரத நிதியரசர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஸ் டி சில்வா கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளதாகவும் செய்தியாளார் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment