Sunday, January 6, 2013

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சிறப்பு முகாமில், உண்ணாவிரதம் இருந்தவர்களில், 11 பேர், போராட்டத்தை வாபஸ் பெற்றனர்!

Sunday, January 06, 2013
செங்கல்பட்டு::செங்கல்பட்டு சிறப்பு முகாமில், உண்ணாவிரதம் இருந்தவர்களில், 11 பேர், போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஒன்பது பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.செங்கல்பட்டு சிறப்பு முகாமில், தற்போது, 36 பேர் உள்ளனர். இதில், 23 பேர் தங்களை, திறந்தவெளி முகாமிற்கு அனுப்பக்கோரி, உண்ணாவிரதம் இருந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட 20 பேர், செங்கல்பட்டு அர” மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முகாமில், மூன்று பேர் உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று முன்தினம் அவர்களிடம், ஆட்சியர் சித்ரசேனன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று, காவல் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் எட்டு பேர், முகாமில் உண்ணாவிரதமிருந்த மூன்று பேர், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மற்றவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்

No comments:

Post a Comment