Tuesday, December 4, 2012

இலங்கை விவகாரம் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி, பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மைக் நிதர்வானிகாஸூடன் பேச்சுவார்த்தை!

Tuesday, December 04, 2012
சென்னை::இலங்கை விவகாரம் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி, பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மைக் நிதர்வானிகாஸூடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நேற்றைய தினம் கருணாநிதிக்கும் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சென்னையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற டொசோ மாநாட்டுத் தீர்மானங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது தொடர்பில் கருணாநிதி அதிருப்தி வெளியிட்டுள்ளார். மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இலங்கை;கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தலையீடு செய்ய வேண்டுமென கருணாநிதி கோரியுள்ளார்.

No comments:

Post a Comment