Tuesday, November 27, 2012

புலிகளுக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்!

Tuesday, November 27, 2012
இலங்கை::புலிகளுக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புலிகளுக்கு ஆதவரான கொடிகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவீரர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சுவரொட்டிகள் மற்றும் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சார நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பிரச்சாரம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அனுப்பி வைக்க்பபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நாட்டில் குழப்ப நிலைமையை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment