Tuesday, November 27, 2012

வவுணதீவு பிரதேசத்தில் சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை!

Tuesday, November 27, 2012
இலங்கை::பாரதூரமான செயல்களுடன் தொடர்புடைய கைதிகளை தடுத்து வைப்பதற்காக மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சிறைச்சாலையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துடன் வவுணதீவு பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.வித்தானகே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பொறியியலாளர்கள் வவுணதீவு பிரதேசத்தில் முன்னோடி ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment