Thursday, November 1, 2012

பொறுமையா பதில் சொல்லணும்' : விஜயகாந்துக்கு பா.ஜ., ராதாகிருஷ்ணன் "அட்வைஸ்'!

Thursday, November 01, 2012
மதுரை::பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்ல வேண்டும்,'' என, தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் "அட்வைஸ்' செய்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ., முதன்மையானதாக வளரும். தே.மு. தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் கட்சி தாவியது, ஜனநாயக முறைப்படி ஏற்கக்கூடியதல்ல. முதல்வரை சந்தித்து தான் மக்
கள் பிரச்னையை சொல்ல வேண்டும் என்பதில்லை.

சென்னை விமான நிலையத்தில், விஜயகாந்த் முன்னிலையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது, ஜனநாயக முறைப்படி ஏற்கத்தக்கது அல்ல. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு பொறுமையாக பதில் சொல்ல வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment