Thursday, November 1, 2012

நீதிமன்ற செயற்பாடுகள் விரைவில் தமிழில்!

Thursday, November 01, 2012
இலங்கை::நீதிமன்ற செயற்பாடுகளில் தமிழ் சிறைக்கைதிகள் எதிர்நோக்கும் மொழிப் பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக விரைவாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றினைப்பு அமைச்சர் வாசுதேவ நானயக்கார குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் குறிப்பிடுகையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவுள்ளதாகவும், விசாரனைகள் மற்றும் குற்றப் பத்திரங்களை தமிழில் தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். நேற்று கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ்கைதிகளை சந்தித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளின் நடவடிக்கை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகளின் குற்ற விசாரனைகள் தொடர்பாக தமிழில் விசாரனைகளை மேற்கொள்ளும் முகமாக விரைவில் விஷேட நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment