Thursday, November 1, 2012

பயங்கரவாதிகளை திருப்பி அனுப்ப சவுதியிடம் இந்தியா கோரிக்கை!

Thursday, November 01, 2012

புதுடில்லி:இந்தியாவில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, சவுதி அரேபியாவிற்கு தப்பிச் சென்ற, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் நால்வரை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி, சவுதி அரேபிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

டில்லி, மும்பை, புனே, ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்த பயங்கரவாதிகள், இந்திய பாஸ்போர்ட் மூலம், சவுதி அரேபியாவிற்கு தப்பிச் சென்றனர். அவர்களை, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் படி, சவுதி அரேபியா அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். விரைவில், நல்ல பதில் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment