Thursday, November 29, 2012

13ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் சட்டமாக ஏற்றுக்கொண்டுள்ளது - தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

Thursday, November 29, 2012
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் சட்டமாக ஏற்றுக்கொண்டுள்ளது என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் ஒரு சில அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த போதிலும், அதனை அரசாங்கத்தின் நிலைப்படாகாகக் கருதப்பட முடியாது தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதி செய்யும் நோக்கில் நாட்டின் அரசியல் சாசனத்தில் 13ம் திருத்தச் சட்டம் இணைத்துக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment