Thursday, November 29, 2012

புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தோர் குறித்து தமிழகத்தில் விசாரணை!

Thursday, November 29, 2012
சென்னை::புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தோர் குறித்து தமிழகத்தில் விசாரணை!
புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் தொடர்பில் தமிழகத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல பாகங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
புலி செயற்பாடுகள் மீள தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என தமிழகத்தின் கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவீரர் தின நிகழ்வுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புலிகளுக்கு ஆதரவளித்து வரும் முக்கியமான நபர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாவீரர் தின பிரச்சார நடவடிக்கைகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment