Monday, October 29, 2012

சேதுசமுத்திர திட்டத்தை வலியுறுத்தி திருவள்ளூர் திமுக துண்டு பிரசுரம்!

Monday, October 29, 2012
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரியும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்தும் துண்டு பிரசுரம் வழங்கினர். இதற்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கன்னிகை ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் பிரபு கஜேந்திரன், எம்.மோகன், தட்சிணாமூர்த்தி, உதயசூரியன், மோகன் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகர செயலாளர் காமு.தயாநிதி வரவேற்றார். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ். சுதர்சனம், மக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்ட முன்னாள் செயலாளர் இ.ஏ.பி.சிவாஜி, முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி, விஜி.ராஜேந்திரன், வக்கீல்கள் பரந்தாமன், ஆதாம், மாவட்ட நிர்வாகிகள் முகப்பேர் நீலகண்டன், விசுவநாதன், கலாம்பாக்கம் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஆதிசேஷன், திராவிடபக்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் பூவை. ஜெயக்குமார், தி.ராசகுமார், கூலூர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சாந்தி ஜனார்த்தனம், சங்கர், ஜெயசீலன், மோதிலால், இளைஞரணி ஜெய்கிருஷ்ணா, மோகனசுந்தரம், கமல், சுகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment