Monday, September 3, 2012

மீன்பிடி படகில் கப்பல் மோதியதில் மீனவரை காணவில்லை!

Monday, September 03, 2012
இலங்கை::வத்தளை உஸ்வெடகெய்யாவ கடற்பகுதியில் கப்பலொன்று மீன்பிடி படகொன்றுடன் மோதியதில் படகிலிருந்த ஒருவர் காணாமற் போயுள்ளார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மீன்பிடி படகொன்று அந்த இடத்தில் மீன்பிடிப்பதற்காக நங்கூரமிடப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வத்தளை, அவரகடுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான மீனவரொருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார். படகில் இருந்த ஏனைய இரு மீனவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment