Sunday, September 30, 2012

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ கிழிநொச்சியில் கோவிலொன்றை திறந்துவைத்தார்!

Sunday, September 30, 2012

இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ நேற்று (செப். 29) கிழிநொச்சிக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்ரை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது செயலாளர் மஹாதேவ ஆசிரம சிறுவர் இல்லத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கோவிலை திறந்துவைத்த்துடன் அவரது வருகையை உறுதிப்படுத்தும் வகையில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டொன்றையும் திறந்துவைத்தார்.

இங்கு வருகைதந்த செயலாளரை ஆசிரம மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் வரவேற்றனர்.பாதுகாப்புச் செயலாளர் தேசிய கொடியேற்றியதைத் தொடர்ந்து மாணவர்கள் தேசிய கீதத்தையும் இசைத்தனர்.

இந் நிகழ்வின் போது செயலாளர் ஆசிரமம் தொடர்பான ஆவணங்களை ஆசிரமத்தின் தலைவரிடம் வைபப ரீதியாக கையளித்தார்.

இக் கோவிலானது எல்.ரீ.டீ.ஈ யினரின் பயங்கரவாத நடவடிக்கைகளின் போது முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் ஆசிரமத்தின் அதிபரின் வேண்டு கோளுக்கினங்க பாதுகாப்புப் படையினரால் இக் கோவில் நிர்மாணிக்கப்பட்டது.அத்துடன் இதற்கான நிதி கொழும்பு சிபிங் லைன் நிருவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.எரிக் அம்பலாங்கொட அவர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரமத்தில் 323 மாணவ மாணவியர் கல்விகற்கின்றனர் இவர்களில் 146 மாணவர்களும் 177 மாணவியரும் அடங்குவர்.

No comments:

Post a Comment