Sunday, September 30, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது!

Sunday, September 30, 2012
சென்னை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது என அறிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மீளவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கும் முனைப்புக்களில் இந்தியா ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திராமன தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நோக்கமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 10ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் இதன் போது அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளின் போது இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment