Saturday, September 29, 2012

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்ற இரண்டு நபர்கள் கைது!

Saturday, September 29, 2012
இலங்கை::இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்ற இரண்டு நபர்கள் நேற்று கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தின் நிறை 858 கிராம் என்பதுடன் அதன் மொத்தப் பெறுமதி ரூபா 60 இலட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
 இருவரும் முறையே நேற்று நள்ளிரவு 12.25 மணி, அதிகாலை 5.30 மணி அளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

இலங்கையை மையமாக வைத்து தங்க கடத்தல்கள் இடம்பெற்று வருவதாக  செய்தி வெளியிடடுள்ளன.

டுபாய் மற்றும் சிங்கபூர் போன்ற நாடுகளில் இருந்து இலங்கை ஊடாக இந்தியாவுக்கு தங்கங்கள் கடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருமாத காலப்பகுதியில் இலங்கையில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 13 பேர் இவ்வாறு சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 3.5 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படடுள்ளது.

இதற்கிடையில், 60 லட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை சென்னைக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் இன்று அதிகாலை ஒரு மணி அளவிலும், மற்றையவர் இன்று காலை 5 மணி அளவிலும் கைது செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 10 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment