Saturday, September 29, 2012

நவுரு தீவுக்கு செல்ல விரும்பாத இலங்கை அகதிகளின் இரண்டாவது குழு இன்றைய தினம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

Saturday, September 29, 2012
நவுரு தீவுக்கு செல்ல விரும்பாத இலங்கை அகதிகளின் இரண்டாவது குழு இன்றைய தினம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் போவன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இவ்வாறு 28 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நவுரு தீவிற்கு மாற்றப்பட்டிருந்த இரண்டு பேரும், கிறிஸ்மஸ் தீவில் இருந்த 20 பேரும் அவர்களுடன், விலாவுட் தீவில் இருந்த ஆறு பேரும் இவ்வாறு நாடு திரும்ப விருப்பம் வெளியிட்டதைத் தொடர்ந்து, இலங்கைக்கு திருப்பி அனுப்ப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு ஆறு லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்க்பபடுகிறது.

No comments:

Post a Comment