Saturday, September 29, 2012

தமிழகத்திற்கான பயண எச்சரிக்கையை தளர்த்துவது குறித்து ஆராய நடவடிக்கை - நியோமல் பெரேரா!

Saturday, September 29, 2012
இலங்கை::இலங்கையர்கள் தமிழகத்திற்கான பயணங்களை மேற்கொள்வது குறித்து தற்காலிகமாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை தளர்த்துவது குறித்து வெளிவிவகார அமைச்சு ஆராயவுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையை ஆராய்ந்த பின்னரே தற்காலிக பயண எச்சரிக்கையை தளர்த்தவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்திலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

புலம்பெயர் தமிழர்கள் அமைப்புடன் தொடர்புடைய இடதுசாரி உறுப்பினர்களால் இலங்கையர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment