Tuesday, September 04, 2012இலங்கை::இராணுவத்தினரின் மற்றுமொரு சமூக நலன்சேவையின் ஊடாக யாழ்பாணதிலுள்ள சீரற்ற வீதிகள் மீள்நிர்மாணம் செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 18ஆவது கெமுனு வொச் படைப்பிரிவனால், கோவிலக்கண்டி மற்றும் நாவற்குலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வீதிகள் தற்போது புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றன.
இவ் இரு கிராமங்களுக்கு செல்லும் வீதிகள் மிகவும் சீரற்ற நிலையில் காணப்படுவதனால், அக்கிராம மக்கள் போக்குவரத்தின் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனை கருத்திற்கு இவ் வீதிகளை சீரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இராணுவத்தினர் முன்வந்துள்ளனர்.
No comments:
Post a Comment