Tuesday, September 04, 2012ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் தொழில்நுட்ப அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
எதிர்வரும் 13ம் திகதி பெரும்பாலும் இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலைமைகள் குறித்து கண்டறியும் நோக்கில் இந்த அதிகாரிகள் விஜயம் செய்ய உள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அரசாங்கத்திடம் ஏற்கனவே கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த தொழில்நுட்ப அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இந்தக் குழுவில் அவதானிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் இடம்பெற்ற வலயங்களுக்கு இந்த அதிகாரிகள் விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த தொழில்நுட்ப அதிகாரிகளின் விஜயத்தைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையும் இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment