Saturday, September 29, 2012

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவை சந்தித்து உரையாடியுள்ளார்!

Saturday, September 29, 2012
இலங்கை::புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே  பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவை சந்தித்து உரையாடியுள்ளார்.

கடற்படை தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து கருத்து பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்படை வரலாற்றின் 18 வது தளபதியாக நேற்று பதியேற்ற வைஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே முன்னர் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment