Saturday, September 29, 2012

சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவிற்கு வரும் எந்தவொரு நபருக்கும் நாட்டினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது - அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது!

Saturday, September 29, 2012
சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவிற்கு வரும் எந்தவொரு நபருக்கும் நாட்டினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இந்த தகவலை, அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முனைபவர்கள், கைது செய்யப்பட்டு நாவுறு தீவில் உள்ள முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில் செல்லும் சுற்றுலா பயணிகள் தொடர்பான விசாரணைகள் நாவுறு தீவிலேயே இடம்பெறும் எனவும், அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக சட்டவிரோதமாக பிரவேசிக்க முனையும் அகதிகள், இது தொடர்பாக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment