Saturday, September 29, 2012

மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

Saturday, September 29, 2012
இலங்கை::மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பாளர்களா என்பதில் அரசாங்கத்திற்கு சந்தேகம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது தொடர்பிலான வாக்கெடுப்பை மக்கள் ஆதரிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சுயாட்சி அதிகாரங்கள் என்பதன் மூலம் மத்திய அரசாங்கம் செய்யும் கடமைகளை செய்வதனையே தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஆணைக்குழுக்களை நியமிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment