Friday, August 31, 2012

கேரள கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள இலங்கை படகு!

Friday, August 31, 2012
சென்னை::கேரளா பிராந்தியத்தின் கொச்சி கரையோரத்திற்கு அருகில் இலங்கை மீன்பிடி படகொன்று நங்கூரமிட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கமைய இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் திடீர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக புலனாய்ப் பிரிவினர் கொச்சி கரையோரப் பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளதாக CNN - IBN LIVE செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றுமொரு மீன்பிடி படகின் மூலம் இலங்கை மீன்பிடி படகிற்கு நபர்கள் ஏற்றிச்செல்லப்படுவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவொரு ஆட்கடத்தல் நடவடிக்கையாகும் என இந்திய பாதுகாப்புத் தரப்பு சந்தேகிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment