Friday, August 31, 2012

தெற்கு அதிவேக மார்க்கத்தினூடாக 750 மில்லியன் ரூபா வருமானம்!

Friday, August 31, 2012
இலங்கை::தெற்கு அதிவேக மார்க்கம் ஆரம்பிக்கப்பட்ட, 2011 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 750 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு அதிவேக மார்க்கத்தின் ஊடாக மூன்று மில்லின் ரூபா வருமானம் கிடைத்து வருவதாக அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு அதிவேக மார்க்கத்தினுள் நாளாந்தம் எண்ணாயிரம் முதல் ஒன்பதாயிரம் வரையான வாகனங்கள் பிரவேசிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment