Thursday, August 30, 2012

22 வருடங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஏறாவூர் சந்தை வீதி!

Thursday, August 30, 2012
இலங்கை::யுத்த சூழ்நிலை காரணமாக 22 கடந்த வருடங்களாக மூடப்பட்டிருந்த ஏறாவூர் சந்தை வீதி மக்கள் பாவனைக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏறாவூர் நான்காம் குறிச்சி பொதுமக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த வீதியின் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறாவூர் நகரில் தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் இந்த வீதி 1990ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்தது.

எனினும யுத்தம் நிறைவுபெற்று சுமூகமான சூழ்நிலை நிலவியபோதிலும் சில பாதுகாப்பு காரணங்களினால் இந்த வீதி திறக்கப்படாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இனங்க இந்த வீதி திறக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் வண்ணமணி பாக்கியராசா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment