Wednesday, July 4, 2012

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் கிடையாது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!

Wednesday,July 04, 2012
இலங்கை::தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில்எவ்வித முன்னேற்றமும் கிடையாது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும்,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்றுநடைபெற்றதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது உள்ளிட்ட முக்கிய விடயங்கள்தொடர்பில் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டால் மட்டுமேபாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனசுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் அரசாங்கத்திற்கு நாட்டம் கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment