Wednesday, July 18, 2012

ஒருநாள் போட்டி தொடர் : இந்தியா , இலங்கை 21ந் தேதி மோதல்!

Wednesday,July 18,2012
சென்னை::5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20,20 கொண்ட தொடரில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டூரில் படுதோல்வி, அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து சிறிது கால ஓய்வுக்கு பின் புத்துணர்ச்சியுடன் வீரர்கள் உள்ளனர். சேவாக், ஜாகீர்கான் அணிக்கு திரும்பியிருப்பது வலுசேர்த்துள்ளது. இலங்கை சென்றடைந்த இந்திய வீரர்கள் இன்று பிற்பகலில் பயிற்சியை மேற்கொண்டனர். முதல் ஒருநாள் போட்டி வருகிற 21ந் தேதியும், 2வது ஆட்டம் 24ந் தேதியும் ஹம்பன்தோட்டாவில் நடக்கிறது. 3வது ஆட்டம் 28ந் தேதியும், 4வது ஆட்டம் 31ந் தேதியும் கொழும்பில் நடக்கிறது. கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4ந் தேதி பாலிகலே மைதானத்தில் நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் பகல் , இரவாகவே நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டிகள் துவங்குகிறது. ஒருநாள் போட்டி தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 20,20 ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஆகஸ்ட் 7ந் தேதி பாலிகலே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடக்கிறது.

No comments:

Post a Comment