Thursday, June 21, 2012

வட மாகாணத்தில் மும்மொழித் திட்டம் ஆரம்பம்!

Thursday, June, 21, 2012
இலங்கை::2020 ஆண்டில் சகல மாணவர்களும் மும்மொழி ஆற்றலை பெற்றிருக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில், வட மாகாணத்துக்கான மும்மொழித் திட்ட ஆரம்ப நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ சந்திரசிறி தலைமையில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் திகதி நடைபெற்றது.

அத்துடன் இத்திட்டத்தின் கீழ் யாழ் கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.
இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், மாகாண கல்வி பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன், மும்மொழித்திட்ட உதவி கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment