Saturday, June 30, 2012

சுயாதீன உரிமைகளை கொண்ட இலங்கை - இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்!

Saturday, June 30, 2012
இலங்கை::இந்தியா எப்பொழுதும் அனைத்து மக்களுக்கும் சமனான, கௌரவத்தையும், உரிமைகளையும் வழங்கும் ஐக்கிய இலங்கையையே எதிர்பார்ப்பதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்திருந்த அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இந்தியா திருப்தி கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்...

இலங்கையில் அரசியல் நல்லிணக்கம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை எட்டுவதற்காக இந்தியா தன்னாலான ஒத்துழைப்புகளை வழங்கும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்...

இலங்கைக்கான விஜயத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மேனன், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் குறிப்பிட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவுகின்ற பிரச்சினைக்கு அந்த நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும் என்றும் இதன்பொருட்டு இலங்கையினால் கோரப்படுகின்ற அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கைக்குள் அனைத்துப் பிரஜைகளும் சமத்துவம் நீதி சுயகௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகவேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா நெருக்கமாக செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனன் நேற்று ஜனாதிபதி... மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பிரமுகர்களை சந்தித்தார்

No comments:

Post a Comment