Saturday, June 30, 2012

வவுனியா சிறைச்சாலை பிரச்சினை; விசாரணைகள் ஆரம்பம்!

Saturday, June 30, 2012
இலங்கை::வவுனியா சிறைச்சாலையில் கடந்த தினங்களில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்படடுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளால் நேற்று முன்தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மூன்று உத்தியோகத்தர்களும் நேற்று மீட்கப்பட்டனர்.

வவுனியா கைதிகள் அநுராதப்புரத்திற்கு மாற்றம்!

கடந்த இரண்டு தினங்களாக வவுனியா சிறைச்சாலையின் அரசியல் கைதிகளால் பணயம் வைக்கப்பட்டிரு மூன்று காவலர்களும், காவல்துறை விசேட படைபிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனை பதில் காவல்துறை ஊடக பேச்சாளர் சஜீவ மெதவத்த எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

காவல்துறை விசேட படைபிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இவர்கள் மூவரும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்;டுள்ளார்.

இந்தநிலையில் அவரை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என்று கோரி, கடந்த சில தினங்களாக உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வந்த அரசியல் கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மூவரை பணய கைதிகளாக சிறைப்பிடித்தனர்.

இந்த நிலையிலேயே, காவல்துறையின் விசேட படைப்பிரிவினரால் குறித்த அதிகாரிகள் மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, குறித்த அரசியல் கைதிகள் அனைவரும் அநுராதபுர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள், இன்றைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே மூன்று சிறைச்சாலை காவலர்களும் ஆறு பாதுகாப்பு அதிகாரிகளும், வவுனியா பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இன்று வவுனியா பொலிஸார் சிறைச்சாலையில் பாரிய தேடுதல் ஒன்றினை நடத்தினர். வவுனியா பொலிஸாருடன் இணைந்து, சிறைக்காவலர்கள், விசேட அதிரடிப்படையினரும் இத்தேடுதலில் ஈடுபட்டதுடன் கைதிகளின் பாவனையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது தொலைபேசி இலக்கங்கள் மற்றும் பல பொருட்களை கைதிகள் தம் வசம் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

சிறைக் கைதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற இயல்பற்ற சூழ்நிலை காரணமாக காயமடைந்தவர்களே இவ்வாறு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment