Saturday, June 30, 2012

1006 ஜோடி இலவச திருமணத்தில் முறைகேடு அறநிலையதுறை அதிகாரிகள் 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்!

Saturday, June 30, 2012
சேலம்::இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல இணை ஆணையர் வாசுநாதன், திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயில் துணை ஆணையர் வான்மதி, சென்னை அறநிலைய து றை உதவி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் நேற்று இரவு திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தவை அரசு செயலாளர் ராஜாராம் பிறப்பித்துள்ளார். 3 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் அறநிலையத்துறையின் சார்பில் சென்னையில் 1006 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இதை தமிழக முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து 1006 ஜோடிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தேர்வு செய்து அனுப்பி வைத்தனர். இவர்களில் ஏராளமான ஜோடிகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக உளவுத்துறை நடத்திய விசாரணையில், திருமணம் ஆன ஜோடிகளும் முதல்வர் நடத்திய திருமணத்தில் கலந்து கொண்டு மீண்டும் திருமணம்

செய்து கொண்டது தெரி யவந்தது. இது அதிகாரிகளுக்கு தெரிந்தே நடந்ததாகவும் கூறப்பட்டது. இதன்காரணமாக அவர்கள் மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment