Saturday, June 30, 2012

தமிழீழமே ஒரே இலக்கு என்றதனால் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது புலனாய்வுப்பிரிவினர் விசாரணை - திவயின!

Saturday, June 30, 2012
இலங்கை::தமிழீழமே ஒரே இலக்கு என்றதனால் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது புலனாய்வுப்பிரிவினர் விசாரணை - திவயின:-

தமிழீழமே ஒரே இலக்கு என கருத்து வெளியிட்டிருந்த தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனிடம் புலனாய்வுப்பிரிவினர் நேற்று மூன்று மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஸ்ரீதரன், இந்தியாவில், புலிகளுக்கு ஆதரவான போல் நியூமன் என்ற பேராசியரிருடன் நேர்காணலில் கலந்துக்கொண்டதுடன், தமது ஒரே நோக்கம் ஈழம் எனவும் இதற்காக புலிகள் அமைப்பு 40 ஆயிரம் உயிர்களை தியாகம் செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

அத்துடன் தமிழர்களுக்கான தனிநாட்டை பெறபோவதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்திருந்தாகவும் அவர், புலிகளின் யாழ் பிராந்திய கட்டளை தளபதியாக இருந்த தீபனின் நெருங்கிய உறவினர் எனவும் திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment