Monday, June 18, 2012

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

Monday, June 18, 2012
ராமேஸ்வரம்::ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டி இறால்களை பறித்து கொண்டனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று ஏராளமான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அன்று மாலை தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களிடம் "இலங்கை கடற்பகுதிக்குள் நுழைய கூடாது' என்று எச்சரித்து அடித்து விரட்டியுள்ளனர். அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்ற மீனவர்கள் இரவு முழுவதும் மீன்பிடித்து இன்று காலை ராமேஸ்வரம் திரும்பினர். "ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இறால் மீன்களை பறித்துக்கொண்டு அடித்து விரட்டியதாக' கரை திரும்பிய மீனவர்கள் ராமகிருஷ்ணன், கருத்தனன் ஆகியோர் தெரிவித்தனர். இதனிடையே தலைமன்னார் கடல் பகுதிக்கு சென்ற மீனவர்கள் சிலர், அக்கடல் பகுதியில் மீன்களுக்காக விரிக்கப்பட்டிருந்த, இலங்கை மீனவர்களின் வலைகளை மீன்பிடிக்கும்போது சேதப்படுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment