Sunday, June 17, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கியூபா ஜனாதிபதி ராகுல் காஸ்ரோவுக்கும் இடையில் நேற்று ஹவானாவிலுள்ள மாளிகையில சந்திப்பொன்று நடைபெற்றது!

Sunday, June, 17, 2012
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கியூபா ஜனாதிபதி ராகுல் காஸ்ரோவுக்கும் இடையில் நேற்று ஹவானாவிலுள்ள மாளிகையில சந்திப்பொன்று நடைபெற்றது.

இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலைமை, சர்வதேச விவகாரங்கள் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய விவகாரங்கள்; தொடர்பில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கலந்துரையாடியதாக அந்த நாட்டு தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கியூபாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருப்பாரெனவும் பின்னர் ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரேஸிலுக்கு புறப்பட்டுச் செல்வாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment