Saturday, June 30, 2012

வவுனியா சிறையில் புலிகளின் முன்னாள் தலைவர்கள் 5 பேரிடம் செய்மதித் தொலைபேசி!

Saturday, June 30, 2012
இலங்கை::ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னரே, வவுனியா சிறையில் உள்ள புலிகளின் முன்னாள் தலைவர்கள் 5 பேர் உட்பட 321புலி உறுப்பினர்கள் சிறைச்சாலையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக வடபகுதியில் உள்ள சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் என திவயின செய்தி வெளியிட்டு உள்ளது.

சசி, ருவான், ருக்ஷான், கண்ணன், குருதரன் ஆகிய புலித் தலைவர்களிடம் செய்மதி தொலைபேசிகள் இருப்பதாகவும் அவற்றின் மூலம் அவர்கள் இராணுவத்தினருக்கு எதிராக வழங்கியுள்ள தகவல்கள் ஒலிப்பரப்பபடுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். சிறையில் உள்ள இந்த புலி உறுப்பினர்களுக்கு, புலிகளின் ஆதரவாளர்களின் உதவிகள் கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment