Thursday, June 28, 2012

யுத்தத்தின் பின் யாழ். பிரதேசத்தின் அபிவிருத்தியினை வலுப்படுத்துவதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியின் 258 ஆவது கிளை திறந்துவைப்பு!

Thursday, June 28, 2012
இலங்கை::யுத்தத்தின் பின் யாழ். பிரதேசத்தின் அபிவிருத்தியினை வலுப்படுத்துவதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியின் 258 ஆவது கிளை யாழ். ஸ்டேன்லி வீதி இலக்கம் 85-87 இல் 2012 ஜூன் மாதம் 25 ஆம் திகதி கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவி கோசலா ஜயவர்தன பிரதேசம் முழுவதும் பரந்துள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி அவர்களை நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பங்காளராக்குவதுடன் குடும்ப சேமிப்பு மற்றும் விசேடமாக பெண்களின் சேமிப்பு ஆர்வத்தினை அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்ப்பதுடன் திவி நேகும தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாரிய வேலைத்திட்டமொன்றினை வங்கி மேற்கொள்ளவுள்ளது.

நாட்டின் பிரதான போஷனை தேவையான பால் உற்பத்தி தொடர்பாக பாரிய திட்டமொன்றினை யாழ் குடா நாட்டில் மேற்கொள்ள முடியும். மனை சார்ந்த பாற்பண்னைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறந்த சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் மற்றும் மனிதர்களின் மனநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்துதல் என்பன எமக்குள்ள சவால்களாகும். அச் சவால்களுக்கு சரியான முறையில் முகங்கொடுத்து 2016ஆம் ஆண்டில் இலங்கையினை பாலின் தன்னிறைவுள்ள நாடாக மாற்றும் தேசிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்வதற்கேற்ற எதிர்கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இப் பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் விவசாய துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் அதனால் அத்துறைகளை அபிவிருத்தி செய்து மீன்பிடித் தொழில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு வகையிலான சேவைகள் பிரதேச அபிவிருத்தி வங்கியால் இப்பிரதேசத்தி;ற்கு கிடைக்குமென தான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும் மேலும் தெரிவித்தார்.

இதன்போது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர் ரத்னசிரி சிரிவர்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எமது வங்கின் கிளை வலையமைப்பினை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இச்சந்தர்ப்பத்தில் யாழ். குடாநாட்டில் அடியெடுத்து வைப்பது எமக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகின்றோம்.

தேசிய வங்கியாக நாடு முழுவதினையும் உள்ளடக்கிய கிளை வலையமைப்பினை கொண்டுள்ள நாம் யாழ். குடாநாட்டில் எமது கிளையினை ஆரம்பிப்பதன் மூலம் எமது சகோதர மக்களின் நன்மைக்காக வேவையாற்ற கிடைத்துள்ளது. அத்துடன் இப்பிரதேசத்தின் வேகமான அபிவிருத்தி பாதையில் எமது பங்களிப்பினை பெற்றுக்கொடுக்க முடியுமென்பது எனது நம்பிக்கையாகும் என அவர் தெரிவித்தர்.

இத்திறப்பு விழாவில் வங்கியின் பிரதேச பொது முகாமையாளர்கள் பிரதிப் பொது முகாமையாளர்கள் முகாமையாளர்கள் உட்பட ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment