Thursday, June 28, 2012

ராஜீவ் கொலையாளிகள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 10ல் இறுதி விசாரணை!

Thursday, June 28, 2012
வேலூர்::ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 10ம் தேதி இறுதி விசாரணை நடைபெற உள்ளது என்று வக்கீல் சந்திரசேகர் கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் உள்ளிட்ட 3 பேரையும் வக்கீல் சந்திரசேகர் நேற்று சந்தித்து பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், Ôமூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த வழக்கின் நிலவரம் மற்றும் வழக்கை கொண்டு செல்லும் விதம் குறித்து மூவருடன் பேசினேன். இந்த வழக்கில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனு ஜனாதிபதி மாளிகை செயலாளரிடம் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்காமல் மூவரின் கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி முடிவு எடுக்கலாம்.
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

No comments:

Post a Comment