Sunday, June, 24, 2012இலங்கை::இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 15 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூன்று படகுகளில் சென்ற மீனவர்கள் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கு சென்ற மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் விடுதலை செய்யப்பட்ட 15 மீனவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளமையினால் எதிர்வரும் வாரத்திற்குள் அவர்களை அழைத்து வர முடியும் எனவும் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் ஆந்திர பிரதேசத்தில் வைத்து 11 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு கூறியுள்ளது.
No comments:
Post a Comment