Thursday, May 31, 2012

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் கைக்குண்டொன்றுடன் மூவர் கைது!

Thursday,May,31,2012
இலங்கை::உப்புவெளி பொலிஸ் பிரிவில் கைக்குண்டொன்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உப்புவெளி பொலிஸ் பிரிவின் புதுக்குடியிருப்பு துவரங்காடு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸார் கூறினார்...

உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment