Thursday, May 31, 2012

அம்பாந்தோட்டை காவன்திஸ்ஸபுரப் பகுதியில் தாய் சேய் சிகிச்சை நிலையம் திறப்பு!

Thursday,May,31,2012
இலங்கை::அம்பாந்தோட்டை காவன்திஸ்ஸபுரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாய் மற்றும் சேய்க்கான சிகிச்சை நிலையத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.

அம்பாந்தோட்டைக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் காவன்திஸ்ஸபுரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையத்திற்கான கட்டிடத் தொகுதியை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சகிதம் கலந்து கொண்டு நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிலையத்தின் மூலம் அப்பகுதியிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment