Thursday, May 31, 2012

ப‌ந்‌த்- பெ‌ங்களூ‌ரி‌ல் 3 அரசு பேரு‌ந்துக‌ள் எ‌ரி‌ப்பு!

Thursday,May,31,2012
பெ‌ங்களூர்::‌முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌ம் காரணமாக க‌ர்நாடகா மா‌நில‌ம் பெ‌ங்களூ‌ரி‌ல் மூ‌ன்று அரசு பேரு‌ந்துகளை ‌தீ வை‌த்து எ‌ரி‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் அ‌ங்கு பெரு‌ம் பத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது.

பெ‌ட்ரோ‌ல் ‌விலையை உய‌ர்வு க‌ண்டி‌த்து நாடு தழு‌‌வி ப‌ந்‌‌‌த் பாஜக ஆளு‌ம் பெ‌ங்களூ‌‌ரி‌ல் முழு அள‌வி‌ல் நட‌ந்து வரு‌கிறது. இதனா‌ல் ம‌க்க‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் உ‌த்தரஹ‌ள்‌ளி, ஒச‌க்கோ‌ட்டை, கே.ஆ‌ர்.புர‌ம் ஆ‌‌கிய பகு‌திக‌ளி‌ல் மூ‌ன்று அரசு பேரு‌ந்துகளை ம‌ர்ம நப‌ர்க‌ள் ‌தீ வை‌த்து எ‌ரி‌த்தன‌ர். இதனா‌ல் உடனடியாக பேரு‌ந்து போ‌‌க்குவர‌த்து ‌நிறு‌த்‌த‌ப்ப‌ட்டது.

மேலு‌‌ம் அச‌ம்பா‌வித‌ங்க‌ள் ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க பெ‌ங்களூ‌ர் உ‌ள்பட 10 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ப‌‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறை அ‌‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. பெ‌ல்லா‌ரி‌யி‌ல் பேரு‌ந்துக‌ள் ‌மீது ம‌ர்ம நப‌ர்க‌ள் க‌ல்‌‌வீ‌சி தா‌க்‌‌கியதா‌ல் சேத‌ம் அடை‌ந்தது.

ஆனா‌ல் இர‌யி‌ல்க‌ள், ஆ‌ட்டோ‌க்க‌ள் வழ‌‌க்க‌ம் போ‌ல் இய‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கையாக பல இட‌ங்க‌ளி‌ல் போ‌லீசா‌ர் கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

No comments:

Post a Comment