Thursday, May 31, 2012

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்!

Thursday,May,31,2012
இலங்கை::பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக நிமால் சிறிபால டி சில்வாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாட்டின் சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணும் புதிய முனைப்புக்களுக்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகளில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முக்கிய பங்காற்றுவார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment