Sunday, ,May, 27, 2012இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடனான தொடர்பு குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியலில் தமது வகிபங்கு குறித்து சரத் பொன்சேகா இன்னமும் தெளிவான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரத் பொன்சேகாவின் தீர்மானத்தின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் னஎ அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்திலேயே கூட்டமைப்பு கூடுதல் கவனம் செலுத்தியதாகவும், சரத் பொன்சேகா விவகாரம் பற்றிய கவனிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment