Monday, April 30, 2012

கிணற்றுக்குள் வீழ்ந்த யானையை மீட்கச்சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!

Monday, April, 30, 2012
இலங்கை::வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் மீது அம்பன்பொல பகுதியில் பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அம்பன்பொல ரணவராவ பகுதி கிணரொன்றுக்குள் விழுந்த யானையை மீட்பதற்காக சென்றிருந்த அதிகாரிகள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவியபோது, தாக்குதலில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான கெப் வாகனம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

No comments:

Post a Comment