Monday, April 30, 2012

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் மேதின கூட்டம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில்!:-யாழ் மேதினத்தில் சஜீத்?

Monday, April, 30, 2012
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் மேதின கூட்டம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில்:-

யாழ்ப்பாணத்தில் நளைய தினம் நடைபெறவுள்ள மே தினக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் எனவும் அது ஐக்கிய தேசியக் கட்சியினதோ, எதிர்க்கட்சிகளின் கூட்டு மே தினமோ அல்ல எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அந்த அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மே தினக் கூட்டம் குறித்த பிரசாரப் பணிகளை தமது கட்சியே மேற்கொண்டு, வட பகுதிகளுக்கு தெளிவுப்படுத்தியதாகவும் சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்...

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எதிர்கட்சிகளின் பொது மேதின கூட்டத்தில் சஜீத்?

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எதிர்கட்சிகளின் பொது மேதின கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு, கட்சியின் பிரதித்தலைவர் சஜீத் பிரேமதாஸவின் குழுவின் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மேதின கூட்டத்தை புறக்கணிப்பதாக முன்னர் சஜீத் பிரேமதாஸ தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினத்தில் மாத்திரம் கலந்துக் கொள்ளவிருப்பதாக அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அந்த குழுவினர் யாழ்ப்பாண மேதின கூட்டத்தில் கலந்துக் கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேதனி கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜே வி பியியும், ஜேவி பியில் இருந்து விலகிச் சென்ற முற்போக்கு சோசலிச கட்சியும் கொழும்பிலேயே தமது மேதின கூட்டத்தை நடத்துகின்றன.

No comments:

Post a Comment