Tuesday, April, 24, 2012
தென்கொரியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், அந்தநாட்டு ஜனாதிபதி லீ மியூங் பக்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரச கௌரவ நிகழ்வை அடுத்து, சியோல் நகரிலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் இருதரப்பு உடன்படிக்கைகள் மூன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், அந்த நாட்டின் சியோல் நகரை நேற்று முற்பகல் சென்றடைந்தனர்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் வாஸ் குணவர்த்தன, ரோஷான் ரணசிங்க, சனீ ரோஹண, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் தென்கொரிய விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தென்கொரியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்கொரியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், அந்தநாட்டு ஜனாதிபதி லீ மியூங் பக்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரச கௌரவ நிகழ்வை அடுத்து, சியோல் நகரிலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் இருதரப்பு உடன்படிக்கைகள் மூன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், அந்த நாட்டின் சியோல் நகரை நேற்று முற்பகல் சென்றடைந்தனர்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் வாஸ் குணவர்த்தன, ரோஷான் ரணசிங்க, சனீ ரோஹண, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் தென்கொரிய விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தென்கொரியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment