Sunday, April 15, 2012

வௌ்ளவத்தையில் ரயிலில் மோதி இளைஞர் மரணம்!

Sunday, April 15, 2012
இலங்கை::வௌ்ளவத்தை கடற்கரை வீதியில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை - ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது கொழும்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment