Monday, April 30, 2012

தமிழ் ஈழ விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் கருணாநிதி: காங். கூட்டணியிலிருந்து விலக திட்டம்?.

Monday, April, 30, 2012
சென்னை::அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளேடு கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்களின் அமைப்பான டெசோ அமைப்பின் கூட்டம் இன்று சென்னையில் கருணாநிதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிலையில் டெலிகிராப் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

திமுகவின் இந்த முயற்சி இந்தியத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் டெலிகிராப் கூறியுள்ளது...

செம்மொழி மாநாடு முதல் டெசோ வரை அவருக்கு தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக கருணாநிதி விரும்புகிறார். அதனால் தமிழர் ஈழ கொள்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் கருணாநிதி.

No comments:

Post a Comment